இதையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் வழக்கம்போல மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்ட மீனவர்களை விரட்டியடித்தனர்.
மேலும் அப்பகுதியில் மீன் பிடித்த உயிர்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை கைப்பற்றியதுடன் படகில் இருந்த ஜெயஸ்டன், தல்ஷா, சார்லஸ், லாசர்கபிஷ்டன், தினேஷ், முனியசாமி, அருள்பிரிஷ்டன், ஜான்சைமன் ஆகிய 8 மீனவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதுபோல் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு படகையும்,அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 17 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம் appeared first on Dinakaran.