இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கொச்சி மாநகராட்சிக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகரசபை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தண்ணீர் பாதுகாப்பு சட்டத்தின்படியும் அவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.குப்பை கொட்டும் வாகனங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னரே அந்த வாகனங்களை விடுவிக்க வேண்டும். குப்பைகளை ஒழுங்காக அப்புறப்படுத்தாத நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
The post கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.