எனவே, இரவு பாண்டியராஜன் குழந்தைகளுடன் ஹாலில் படுத்துக்கொண்ட நிலையில் அன்னியம்மாள் பெட்ரூமில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். பின்னர், நேற்று காலையில் மகன் விஷ்ணு பெட்ரூமை திறந்து பார்த்தபோது, அன்னியம்மாள், மின்விசிறியில் வேட்டியால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் அன்னியம்மாளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அன்னியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், அன்னியம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.
