சோழிங்கநல்லூர், ஜன.5: நுங்கம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்தவர் திலகம் (42). புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் நிர்மலா (50). இவர்கள் நேற்று முன்தினம் இரவு மாநகர பேருந்தில் (தடம் எண் 29 ஏ) சென்றனர். அப்போது பேருந்தில் இருந்த 3 பேரின் செல்போன் திருடு போனது. இதையடுத்து பெண் உள்பட 4 பேர் வேகமாக பேருந்தில் இருந்து இறங்க முயன்றனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் திருடுபோன 3 செல்போன்கள் இருந்தது.
இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, பெண் உள்பட 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் பெரம்பூர் பகுதியை சேர்ந்த பழனி (36), அவரது மனைவி ஜமுனா (24), கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலு (39), மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த குப்பன் (42) என்பது தெரியவந்தது.
