சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா..!!

சென்னை: முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் அன்வர் ராஜா இணைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்வர்ராஜா. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் 2021ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூறுகையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் அன்வர் ராஜா கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

2001-2006 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் அன்வர் ராஜா பணியாற்றியுள்ளார். தற்போது இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அன்வர் ராஜா அதிமுகவில் இணைந்தார்.

The post சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா..!! appeared first on Dinakaran.

Related Stories: