தெஹ்ராதூண்: உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ளவர்களை மீட்க மனிதர்களை கொண்டு துளையிடும் பணி தொடங்கப்பட உள்ளது என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரி ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார். மனிதர்களை கொண்டு துளையிடும் பணிக்காக பயிற்சி பெற்ற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.