கடந்த செப் 26 முதல் உயர் பாதுகாப்புள்ள ராவல்பின்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அல்-காதிர் டிரஸ்ட் வழக்கில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19ஆயிரம் கோடி மோசடி செய்ததாக பாக். ஊழல் தடுப்பு ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் சிறையில் உள்ள அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்ததாக பாக். ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கானை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
The post ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.