இக்கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள், கோரை புற்கள் அதிகளவில் முளைத்து, புதர்மண்டி தூர்ந்தநிலையில் உள்ளது. மேலும், அப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுவதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அதிகளவில் கொசு உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு அருகிலேயே அதிகளவில் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post கலெக்டர் அலுவலகம் அருகே புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.