சென்னையில் புகைமூட்டம்: விமானசேவை பாதிப்பு

சென்னை: போகிப் பண்டிகையையொட்டி சென்னையில் புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளது. கடும் புகையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன. சென்னை புகை மூட்டத்தால் மும்பை, டெல்லி, மஸ்கட், விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருக்கின்றன.

The post சென்னையில் புகைமூட்டம்: விமானசேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: