பால் கடையில் குட்கா விற்றவர் கைது: திருவிக நகர் பகுதியில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக செம்பியம் உதவி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் திருவிக நகர் எஸ்ஆர்பி கோயில் தெருவில் உள்ள பால் கடையை சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த கடையிலிருந்து 3 பெட்டிகளில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையை நடத்தி வந்த திருவிக நகர் கே.சி.கார்டன் 2வது தெருவை சேர்ந்த சோலை செல்வம் (36) என்பவரை கைது செய்தனர். இவர் செங்குன்றம் பகுதியில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி பால் கடையில் வைத்து தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சோலை செல்வம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சென்னையில் ஒரு வார சோதனை குட்கா விற்ற 72 பேர் கைது appeared first on Dinakaran.