பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை: பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆலாந்துறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா ஹட்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் தலைமை ஆசிரியர் ஜீவா உள்ளிட்டோர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ஜீவா ஹட்சனை கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி சஸ்பெண்ட் செய்தார்.

The post பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: