சென்னையில் அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு!!

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிசிடிவி பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். X, H, H1 மற்றும் Drugs குறிப்பிட்டுள்ள மருந்து விற்பனை செய்யும் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். ஆய்வின்போது சிசிடிவி கேமரா பொருத்தாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: