சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: