அப்போது அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘ கடந்த 2021ல் இந்தப் பகுதி திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முறையான அனுமதி பெற்று நடைபாதை அமைக்கும் பணி நிலுவையில் தான் உள்ளது’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சதுரகிரி மலைப்பகுதியில் பணிகள் ேமற்கொள்ள வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் முறையான அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம்’, என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post சதுரகிரி கோயில் நடைபாதையை அனுமதி பெற்று விரிவுபடுத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.