இந்நிலையில் மற்றொரு சாதகமான செய்தியாக பிரான்ஸ் நடை சேர்ந்த பிரபல நிறுவனமான ஐ.டி சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் சுமார் 6 லட்சம் சதுர ஆதி பரப்பளவில் புதிய வளாகத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாகவும் 2027க்குள் சென்னை அலுவலகம் கட்டிமுடிக்கப்படும் என கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலம் அருகே உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்குவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
The post 5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு appeared first on Dinakaran.