சென்னை : 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது ஒன்றிய அரசு தரப்பில்,”3 சட்டங்களும் அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறவில்லை; எவரின் அடிப்படை உரிமையும் பாதிக்கப்படவில்லை. சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் நாடாளுமன்றத்தின் விருப்பம்; இதில் நீதிமன்றம் தலையிட முடியாது,”இவ்வாறு வாதிடப்பட்டது. இதையடுத்து, 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் ஜூலை 23க்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் என ஒன்றிய அரசு வாதம்!! appeared first on Dinakaran.