சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் புகையிலை பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை பொருட்களை கடத்துதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 30 பேரிடம் இருந்து 494 கிலோ புகையிலை பொருட்கள், 9.2 கிலோ மாவா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய 3 ஆட்டோக்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

 

The post சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: