சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

 

சமயபுரம், ஆக. 28: மண்ணச்சநல்லூர் அருகே இனாம்கல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் ரூ.18லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஊராட்சிமன்ற தலைவர் தொடங்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி 2 மற்றும் 3 ம் வார்டு பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாகவும், மழைகாலத்தில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாகவும் காணப்பட்டது.

இதனால் அவதிப்பட்ட பொதுமக்கள் புதிய சாலை அமைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஈச்சம்பட்டி 2 மற்றும் 3வது வார்டுகளில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் வார்டு பொதுமக்கள் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் , ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: