தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ கூட்டாட்சியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.மேற்கு வங்கத்தை பிரிக்கும் முயற்சியை நாங்கள் எதிர்க்கிறோம்.நாட்டின் சுதந்திரத்தில் வங்க மக்களின் போராட்டம் முக்கியமானது.எனவே அனைவரும் இணைந்து மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்’’ என்றார். எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி,‘‘மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிர்க்கிறோம். ஒன்றுபட்ட மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரும்புகிறோம் என்ற வரியை சேர்த்தால் தீர்மானத்தை தங்கள் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். அவருடைய முன்மொழிவை மம்தா ஏற்று கொண்டதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
The post பாஜ தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.