ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,346 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலையில் வினாடிக்கு 6,357 கனஅடியாக இருந்த நீர்வரத்து 12 மணி நிலவரப்படி 9,346 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் காலையில் 47.23 அடியாக இருந்த நிலையில் தற்போது 48.08 அடியாக உயர்ந்துள்ளது.