வருகிறது.
இதுசம்பந்தமாக சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த கவுதம் (54), மலையனூரை சேர்ந்த பரமசிவம் (38), ராம்குமார் (40), மாதவரம் பகுதியை சேர்ந்த பென்சிலால் (42) ஆகிய 4 பேரிடம் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி அனுமந்தன் தலைமையில்,திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 4 உட்கோட்டங்களில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதன்படி, மாவட்டம் முழுவதும் கடந்த 19ம் தேதி முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில், டாஸ்மாக் மது கடத்திய மற்றும் விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 31 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1519 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்திவந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண் உட்பட 10 பேரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கின்றன.
The post திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில் அதிரடி ரெய்டு; மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்: பெண்கள் உள்பட 45 பேர் கைது; 105 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.