படூர் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே வந்தபோது, குறுக்கே நாய் ஒன்று வந்ததாக தெரிகிறது. படுவேகமாக வந்ததால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறம் சிவா திருப்பி உள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையை விட்டு இறங்கி மின்னல் வேகத்தில் பறந்து தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளே விழுந்து நொறுங்கியது. இதில் காரில் இருந்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மகா ஸ்வேதா, பவித்ரா, திருச்சியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து, போலீசார் 3 மாணவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே பள்ளிக்கரணை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை ஆணையர் சமய் சிங் மீனா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காரை ஓட்டி வந்த மாணவன் ஏன் வேகமாக ஓட்டி வந்தார் என விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், காரை ஓட்டி வந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவன் சிவா சென்னையைச் சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் ஒருவரின் மகன் என்று கூறப்படுகிறது.
The post படூரில் கார் கவிழ்ந்து விபத்து 3 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி: இருவர் படுகாயம் appeared first on Dinakaran.