இந்நிலையில், புதிய தலைமை செயலாளராக பதவியேற்க உள்ள சிவ்தாஸ் மீனா நேற்று மதியம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து கடம்பாடியில் 46 ஏக்கர் பரப்பளவில் உள்ள நன்செய் மற்றும் புன்செய் நிலத்தில் விளையாட்டு திடல் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என வரைபடத்தை வைத்து திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் மண்ணின் உறுதித் தன்மை, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ், அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் குமரகுருபரன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post மாமல்லபுரம் அருகே கடம்பாடியில் 46 ஏக்கரில் விளையாட்டு திடலா?: புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு appeared first on Dinakaran.