இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளனர். எனது 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நான் போலீசில் புகார் அளிக்க சென்றேன். அப்போது ஜெயபால், ‘புகார் அளித்தால் உன்னை கொலை செய்து விடுவேன்’ என மிரட்டுகிறார். எனவே நிலங்களை மீட்டு தருவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ஏடிஎஸ்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
The post போலி ஆவணம் தயாரித்து அதிமுக பிரமுகர் 80 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார்: திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் மனு appeared first on Dinakaran.