ரங்கத்தைபோல் இங்கும் முதல் 11 நாட்கள் பகல் பத்து உற்சவமும், அடுத்த 10 நாட்கள் ராபத்து உற்சவமும் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்யபிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யும் இந்த 25 நாள் விழாவிற்கு தான் அத்யாயன உற்சவம் என்று பெயர். 24வது நாள் வராஹ சுவாமி சாத்துமுறை நடத்தப்பட்டு, 25வது நாளில் உற்சவம் நிறைவடையும். இந்த அத்யாயன உற்சவம் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி ரங்கநாதர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், கிழக்கு திசையை நோக்கி ராமானுஜரும் கொலு வைக்கப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு திருப்பாவை பாசுரம் பாடப்பட உள்ளது. வரும் ஜனவரி 5ம் தேதி வரை தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் நடத்தப்பட உள்ளது.
The post வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை முதல் ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் appeared first on Dinakaran.