இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்துக்கு காரணமான பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளர், சிவசேனா (ஷிண்டே) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜேஸ் ஷா என்பது உறுதியானது. சம்பவத்தின் போது அந்த காரில் அவரது மகன் மிகிர் ஷாவும், ராஜேந்திர சிங் விதாவத்தும், ஓட்டுநரும் இருந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மிகிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா, ராஜேந்திர சிங் விதாவத் ஆகியோரை கைது செய்துள்ளோம். இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டனர். பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக இருக்கும் மிகிர் ஷாவை 6 தனிப்படை தேடி வருகிறது’ என்றனர்.
The post கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு appeared first on Dinakaran.