இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க பிரபலமான சுற்றுலாத் தலமான ராய்காட் கோட்டையில் மழைபெய்ததால் அவற்றின் படிகள் நீர்வீழ்ச்சிகளாக மாறியது. இந்த நிலையில் கோட்டைக்கு வருகை தரும் சிவ பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் மலைப்பாதை வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சென்ற மராட்டிய பேரிடர் மேலாண் படையினர் 10 பேரை மீட்ட நிலையில் மேலும் 20 சுற்றுலா பயணிகளை மீட்டு வருகின்றனர். மேலும், கனமழையின் போது கோட்டைகள் மற்றும் பிற ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை சூழ்ந்த பெருவெள்ளம்: 30 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர் appeared first on Dinakaran.