அவனியாபுரம், நவ. 25: மதுரை விமான நிலையத்தில் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதை சர்வதேச தரத்தில் மாற்றவும், நவீன ரேடார்கள்- செயற்கை கோளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விமானிகளுக்கு விமானத்தை துல்லியமாக தரை இறக்கவும், விமான நிலைய விரிவாக்கத்தால் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் நவீன தொழில் நுட்பத்துடன் கட்ட ரூ.84 கோடி இந்திய விமான ஆணையம் ஒதுக்கியுள்ளது இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு விரைவில் பணிகள் துவங்கவுள்ளன. மேலும் தற்போது விமான நிலையத்தில் 7 விமானங்கள் நிறுத்த வசதி உள்ள நிலையில், கூடுதலாக 7 விமானங்கள் நிறுத்துவதற்கு உண்டான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது எனவும், இதில் கொடைக்கானல் சுற்றுலா செல்ல வசதியாக 2 நிறுத்தங்கள் ஹெலிகாப்டர் நிறுத்த ஒதுக்கவுள்ளதாக விமானநிலைய இயக்குநர் செந்தில்வளவன் தெரிவித்தார்.