வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சோழவந்தான், ஏப். 27: சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக நேற்று காலை சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.ஐ சேகர் மற்றும் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்த விசாரணையில் இறந்தவர் வில்லிபுத்தூரை சேர்ந்த காளிமுத்து மகன் சங்கர்(24) எனவும், இவர் சோழவந்தானில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, கோழிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. திருமணமாகாத இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: