திருநங்கையை தாக்கியவர் கைது

பல்லடம், ஏப்.27: பல்லடத்தில் திருநங்கையை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். பல்லடத்தை சேர்ந்தவர் அம்சா (30). திருநங்கையான இவர் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேற்கு பல்லடத்தைச் சேர்ந்த அருண் பாஷா (24), காளிதாஸ் (32) ஆகியோர் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அருண் பாஷா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அம்சாவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அம்சா பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் பாஷாவை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காளிதாஸை தேடி வருகின்றனர். மேலும் காயமடைந்த அம்சா பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

The post திருநங்கையை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: