20 % போனஸ் வழங்க கோரி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.5:  அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க கோரி ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே சி.ஐ.டி.யு.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், கொரோனா காலத்தை சொல்லி பல நிறுவனங்கள் எந்த உரிமையும், சலுகையுமின்றி கடும் உழைப்பை பெற்று சொற்ப கூலி பெறும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கை அனுமதிக்க கூடாது.

சம்பள குறைப்பு, போனஸ் மறுப்பை ஏற்க முடியாது. எனவே, விசைத்தறி, ஸ்கிரின் பிரிண்டிங், டையிங், பிராசசிங், ஆயில் மில், சிறிய, பெரிய வர்த்தக, வியாபார நிறுவனங்கள், ஓட்டல்களில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் மற்றும் விலை உயர்வை ஈடுகட்டும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், மாவட்ட தலைவர் சுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: