செங்கல்பட்டு, நவ.1: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்பு சட்டங்களை திரும்ப பெறக் கோரி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே அறவழி போராட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராமன்,குமரவேல், மணிகண்டன்,முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜெ.பாஸ்கர் வரவேற்றார். மாநில பொதுக்குழ உறுப்பினர்கள் சி.ஆர்.பெருமாள், பாஸ்கர் நகர தலைவர்கள் தனசேகர், கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்: மத்திய பாஜ அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத் தூண் அருகில் அறவழி அமர்வு பேராட்டம் நேற்று நடந்தது.