செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத நோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது மருத்துவமனை மருத்துவ அலுவலர் அனுபாமா தலைமை வகித்தார். நரம்பியல் மருத்துவர் பாலாஜி முன்னிலை வகித்தார். டீன் சாந்திமலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வாய் குழறுதல், கை, கால்கள் மரத்து போகுதல் ஆகிய குறைபாடுகள் தென்பட்டால், அது பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.