செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவரது நண்பர்கள் தனசேகர் (24) சுரேந்தர் (25) ஆகியோருடன், நேற்று மாலை செங்கல்பட்டு சின்ன மேலமையூர் ராட்டிண கிணறு பிள்ளையார் கோயில் அருகே கஞ்சா குடித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த சுமார் 10 பேர், கஞ்சா குடித்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், அங்கிருந்த 3 பேரையும், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால், சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் தனசேகர், சுரேந்தர், விக்னேஷ் ஆகியோருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.