கடலூர், அக். 2: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 20,276 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 180 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,276 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 162 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 18,549 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, நேற்று 4 பேர் இறந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.