வானூர், செப். 26: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராணி(58). இவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், தாங்கள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும் அந்த நிறுவனத்தின் மூலம் தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதால் அதனை அளிக்க வந்துள்ளதாகவும், அதற்காக போட்டோ எடுக்க வேண்டும் என்றும் விஜயராணியிடம் கூறியுள்ளனர். அதற்கு மூதாட்டி சம்மதம் தெரிவித்ததும் பரிசு பெற தங்க நகைகள் போட்டிருக்க கூடாது, எனவே, அதனை கழட்டி வைக்குமாறு கூறியுள்ளனர். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை கழட்டி வைத்தவுடன் போட்டோ எடுத்துள்ளனர். மேலும் தங்கள் கணவருடைய பாஸ்போர்ட் போட்டோ வேண்டும். அதனை எடுத்து வாங்கள் என்று கூறியுள்ளனர்.