காஞ்சிபுரம், மார்ச் 20: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து, கலெக்டர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பிரதிநிகளுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினமும் வரும் பணியாளர்கள் அனைவருக்கும் கைகழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளும் முறை குறித்து அறிவுறுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.