ஆண்டிபட்டி, மார்ச் 18: ஆண்டிபட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரத்தில் தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மொட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் நிஷாந்திராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகாவில் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்த காரணத்தால் விவசாயம் மிகவும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதியை வறட்சி பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.