விபத்தில் பெண் காயம்

வேடசந்தூர், ஏப்.28: தாடிக்கொம்பு அருகே உண்டாரபட்டியை சேர்ந்தவர் காளிதாஸ்(32). இவரது மனைவி மகாலட்சுமி(27). இருவரும் இரு சக்கர வாகனத்தில் இடையகோட்டை சென்று விட்டு மீண்டும் ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டு இருந்தனர். சாலையூர் நால்ரோடு அருகே நவாலூத்து பகுதியில் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது திடீரென சேலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சுற்றியது. இதில் கீழே விழுந்த மகாலட்சுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. 108 வாகனம் மூலம் மகாலட்சுமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post விபத்தில் பெண் காயம் appeared first on Dinakaran.

Related Stories: