திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

ஆண்டிபட்டி, ஏப். 29: ஆண்டிபட்டி நகரில் திமுக கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது. ஆண்டிபட்டி நகர் வழியாக செல்லும் கூலித் தொழிலாளர்களும், டூவீலரில் செல்வோரும், பாதசாரிகளும் வெயிலால் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் உடல் நலனுக்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி திமுக சார்பில் ஆண்டிபட்டி வைகை அணை சாலைப் பிரிவில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ராமசாமி, ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் பொன்.சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: