ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்: பொக்லைனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

 

ஆண்டிபட்டி, ஏப். 30: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் ஆண்டிபட்டி வனத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக கிராவல் மண் திருட்டு நடைபெற்று வருவதாக வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ராஜூ மற்றும் மற்றொரு அதிகாரி நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கிராவல் மண் திருட்டு நடைபெற்று கொண்டிருந்தது. கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் அதிகாரிகளை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் வருவாய் ஆய்வாளர் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கிராவல் மண் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் திருட்டுத்தனமாக மண் திருடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்: பொக்லைனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: