உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி

உத்தமபாளையம், ஏப். 26: உத்தமபாளையத்தில் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். உத்தமபாளையம் தென்னகர் காலனியை சேர்ந்தவர் காமையா (60). இவர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்தபின் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

உத்தமபாளையம் யூனியன் ஆபிஸ் அருகே நெடுஞ்சாலையில் சென்ற போது கம்பத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் ஒன்று இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காமையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காமையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து போடியை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி appeared first on Dinakaran.

Related Stories: