கண்மாயில் முறைகேடாக மீன்பிடிப்பு

தேனி, மார்ச் 18: தேனி மாவட்டம், வைகை அணை அருகே குள்ளப்புரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளித்தனர். இம்மனுவில், குள்ளப்புரம் பெரிய கண்மாயில் முறைகேடாக கோயில்புரத்தை சேர்ந்த சிலர் மீன்வளத்துறை அதிகாரியின் துணையோடு மீன்களை வளர்த்து வருகின்றனர். இரவு நேரங்களில் இவ்வழியாக தோட்ட வேலைக்கு செல்வோரை மீன்பிடிப்பவர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, முறைகேடாக மீன்பிடிப்பவர்கள் மீதும், இதற்கு உடந்தையாக உள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: