பண்ருட்டி, மார்ச் 18: பண்ருட்டி அருகே லாரி மோதி வாலிபர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவராமன் மகன் மணிபாலன் (20), இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அப்பர் மகன் தீனதயாளன் (23) என்பவரும் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டிப்பாளையம் ரோட்டில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதிக்கொண்டனர்.