சிதம்பரம், மார்ச் 17: சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தில் இருந்து திட்டுக்காட்டூர் செல்லும் வழியில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் இருந்து நேற்று 4 லாரிகளில் மணல் எடுக்கப்பட்டது. இதை பார்த்த பெராம்பட்டு கிராம மக்கள் திடீரென லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பழைய கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.