ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

நெய்வேலி, மார்ச் 17:  நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட மோட்டார் வாகன அலுவலர் உத்தரவின் பேரில் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் மற்றும் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் சார்பில் சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ் போக்குவரத்து துணை மேலாளர் அருளழகன் உள்ளிட்டோர் நெய்வேலி நகரில் உள்ள ஆட்டோ ஒட்டுனர்களிடமும், பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுப்பது, சுகாதார ஆய்வாளர் கொரோனா பற்றிய விளக்க உரையில் அதனை தடுப்பது குறித்தும், தாக்கியவுடன் செய்ய வேண்டிய செயல்கள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர், உதவியாளர் சங்கரநாராயணன் மற்றும் நெய்வேலி நகர பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: