முத்துப்பேட்டை, மார்ச் 13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழக சட்டமன்றத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் பேசி வந்த அய்யாவழி பாலமுருகன் கைது சம்பவத்தை கண்டித்தும், கோவையில் பள்ளி வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்தும், கோவை எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் நீதி தேவதை சிலையுடன் நூதன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை ஜெர்மன் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைத்து ஜாமத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் கருத்தப்பா சித்திக் வரவேற்று பேசினார்.