தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

 

நீடாமங்கலம், ஏப்.29: நீடாமங்கலம் அருகில் தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் தேவங்குடியில் உள்ள கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 26ம் தேதி வேத பிரபந்தங்களுடன் கும்பாபிஷேக ஏற்பாடு தொடங்கி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 27ம் தேதி அக்னி ஆராதனையும், திருமஞ்சன அபிஷேக ஆராதனையும், கும்ப மண்டல அக்னி ஆராதனையும் ,பூர்ணாஹீதி ஹோமங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று கும்ப மண்டல அக்னி ஆராதனையும், கடம் புறப்பாடும் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகமும் நடந்தது. பிறகு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை பெருமாள் வீதி புறப்பாடு நடந்தது

The post தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: