பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கும்பகோணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஏப்.23:கும்பகோணத்தில் பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கடுமையான சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து ஓட்டுநர் ரமேஷை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஐஎன்டியு சி மாநில துணைத்தலைவர் வைத்தியநாதன், அறிவர் அம்பேத்கர், பொதுச்செயலாளர் மதியழகன், குடியரசு கட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கவுதமன், அம்பேத்கர் தொழிலாளர் சங்க பொறுப்பாளர் ரமேஷ், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் செங்குட்டுவன், அண்ணா தொழிற்சங்க பேரவை முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

The post பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கும்பகோணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: