திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்

திருத்துறைப்பூண்டி ஏப் 28: திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்-சீதா திருக்கல்யாண வைபவம் மற்றும் தெப்போற்சவம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிநகர் பகுதியில் அமைந்துள்ள சீதா லட்சுமண அனுமத்சமேத ராமர் கோயிலில் நேற்றுமுன்தினம் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கோயில் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் சீதா திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பொய்சொல்லாபிள்ளையார் கோயிலிருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர். இதில் ராமர்- சீதாலட்சுமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மந்திரங்கள் முழங்க மாலை மாற்றிக் கொண்டு சீதாலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றது.

தொடர்ந்து கோயில் அருகில் உள்ள ராமர் மட குளத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மகிழம் பூ விநாயகர் சீதா-ராமர் எழுந்தருளிய முதல் தெப்போற்சவம் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: